குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0435 | பொருள் | அரசியல் | குற்றம் கடிதல் Avoid Blemishes |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத் தூறு போலக் கெடும்.
பரிமேலழகர் உரை:
வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை= குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்= அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.
விளக்கம்:
'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர்' என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையாற் பெற்றாம்.