குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0418 | பொருள் | அரசியல் | கேள்வி Knowledge Through Listening |
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
பரிமேலழகர் உரை
கேட்பினும் கேளாத் தகையவே= தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்குமாயினும் செவிடாம் தன்மையவேயாம்;
கேள்வியால் தோட்கப்படாத செவி= கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
விளக்கம்
ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையிற் 'கேளாத் தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். பழைய துளை துளையன்று என்பதாம்.