குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம்-Chapter The Possession of Love |
0080 | அறம் | இல்லறம் | அன்புடைமை |
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியது உயிர் நிலை அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு. (௰) Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku Enpudhol Porththa Utampu. பரிமேலழகர் உரை: (இதன்பொருள்) அன்பின் வழியது உயிர்நிலை = அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே, உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த = அவ்வன்பில்லாதார்க்கு (உளவான) உடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம்; (உயி்ர்நின்றனவாகா). பரிமேலழகர் உரைவிளக்கம் இல்லறம் பயவாமையின் அன்னவாயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படுங் குற்றம் கூறப்பட்டது. தெய்வப்புலமைத்திருவள்ளுவர் செய்த 'அன்புடைமை' எனும் அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் முற்றும். That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.