Couplet-0049

குறள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம்-Chapter Domestic Life
0049அறம்இல்லறம்இல்வாழ்க்கை
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. 

Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum
Piranpazhippa Thillaayin Nandru.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே = (இருவகையறத்தினும் நூல்களான்) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, இல்வாழ்க்கையே;
அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று = (ஏனைத் துறவறமோவெனின்) அதுவும், பிறனாற் பழிக்கப்படுவதில்லைஆயின், (அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக) நன்று.

பரிமேலழகர் உரைவிளக்கம்

ஏகாரம், பிரிநிலைக்கண் வந்தது. இதனாற் பிரிக்கப்பட்டது துறவறமாகலின், ‘அஃது’ என்னுஞ்சுட்டுப்பெயர் அதன்மேனின்றது.
‘பிறன்பழிப்பது’ என்றது, கூடாவொழுக்கத்தை.
துறவறம் மனத்தையும் பொறிகளையுயும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாயவழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புலவின்பங்கள் ஆரத்துய்க்கும் எண்மையுடைய இல்வாழ்க்கையோடு அறமென ஒருங்கி எண்ணப் படுவது என்றவாறாயி்ற்று.
இந்நான்கு பாட்டானும் இன்னிலையே பயனுடைத்தென இதன் சிறப்புக்கூறப்பட்டது.

The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

Leave a comment