குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0399 | பொருள் | அரசியல் | கல்வி Education |
தாம்இன்பு உறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
தாம் இன்பு உறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்
பரிமேலழகர் உரை
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு= தாம் இன்புறுவதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர்= கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
விளக்கம்
'தாம்இன்புறுத'லாவது, நிகழ்வின்கட் சொற்பொருள்களின் சுவைநுகர்வானும், புகழ் பொருள் பூசைபெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். 'உலகுஇன்புறுத'லாவது, இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன வெல்லாம் அறியப்பெற்றோம் என்றும், "யாண்டு பலவாக நரையில"4மாயினேம் என்று உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்று இவற்றால் துன்புறுதலு்ம், பலரையும் பகையாக்கலும் உடைத்தென அறிந்து, அதனைக் காமுறாமையிற் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுவதற்கு, உலகுஇன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே 'காமுறுவர்' என்றும் கூறினார்.