குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0215 | அறம் | இல்லறம் | ஒப்புரவு அறிதல் Social Responsibilities |
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு ஊர் உணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு பரிமேலழகர் உரை உலகு அவாம் பேரறிவாளன் திரு= உலகநடையை விரும்பிச் செய்யும் பேரறிவினையுடையவனது செல்வம்; ஊருணி நீர் நிறைந்தற்று= ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணுங்குளம் நீர் நிறைந்தாற் போலும் என்றவாறு. பரிமேலழகர் உரைவிளக்கம் நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. பாழ்போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.