Couplet – 0215

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0215அறம் இல்லறம்ஒப்புரவு அறிதல்
Social Responsibilities  
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு

ஊர் உணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு

பரிமேலழகர் உரை 

உலகு அவாம் பேரறிவாளன் திரு= உலகநடையை விரும்பிச் செய்யும் பேரறிவினையுடையவனது செல்வம்;
ஊருணி நீர் நிறைந்தற்று= ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணுங்குளம் நீர் நிறைந்தாற் போலும் என்றவாறு.

பரிமேலழகர் உரைவிளக்கம்

நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. பாழ்போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.