குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம்-Chapter The Wealth of Children |
0062 | அறம் | இல்லறம் | மக்கட்பேறு |
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின். Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap Panputai Makkat Perin. பரிமேலழகர் உரை: (இதன் பொருள்) எழுபிறப்பும் தீயவை தீண்டா = (வினைவயத்தாற் பிறக்கும்) பிறப்பு ஏழின் கண்ணும் (ஒருவனைத்) துன்பங்கள் சென்றடையா; பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = (பிறரால்) பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின். பரிமேலழகர் உரைவிளக்கம் அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயி னென்றவாறாயிற்று. பிறப்பேழாவன: "ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.#" தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர்செய்யுந் தானதருமங்கட்கு அவர் நற்குணங் காரணமாகலின், ‘பண்பு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது. The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice