குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0221 | அறம் | இல்லறம் | ஈகை Charity |
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து பரிமேலழகர் உரை வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை= ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுபபதே பிறர்க்குக் கொடுததலாவது; மற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து= அஃது ஒழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. பரிமேலழகர் உரை விளக்கம் வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. 'குறியெதிர்ப்பா'வது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின் குறியெதிர்ப்பை 'நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது