Couplet-0082

குள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம்-Chapter Hospitality
0082அறம்இல்லறம்விருந்தோம்பல்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (02)|

Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa
Marundheninum Ventarpaar Randru.

பரிமேலழகர் உரை:.

(இதன்பொருள்) சாவா மருந்தெனினும் = உண்ணப்படும் பொருள் அமிர்தமேயெனினும்;
விருந்து புறத்ததாத் தான் உண்டல் = தன்னை நோக்கிவந்த விருந்து தன்னில்லின் புறத்ததாகத் தானே உண்டல்;
வேண்டற்பாற்று அன்று = விரும்புதன் முறைமை யுடைத்ன்று.

பரிமேலழகர் உரைவிளக்கம்

சாவாமருந்து சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. விருந்தின்றியே ஒருகாற் றானுண்டலைச் சாவா மருந்தென்பார் உளராயினும் அதனையொழிகவென் றுரைப்பினுமமையும்.
இவை யிரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality
.

Leave a comment