நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு.
பரிமேலழகர் உரை
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து= ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு= இவ்வுலகம்.
உரைவிளக்கம்
ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண் பாற்கே கூறினார். இந்நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.