குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம்-Chpter Assertion of the Strength of Virtue |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum Izhukkaa Iyandradhu Aram. பரிமேலழகர் உரை: (இதன் பொருள்) அழுக்காறு = (பிறர் ஆக்கம்) பொறாமையும்; அவா = (புலன்கண்மேற் செல்கின்ற) அவாவும்; வெகுளி = (அவை ஏதுவாகப் பிறர்பால் வரும்) வெகுளியும்; இன்னாச்சொல் = (அதுபற்றி வரும்) கடுஞ்சொல்லும் (ஆகிய); நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது. பரிமேலழகர் உரை விளக்கம்: இதனான், ‘இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது’ என்பதூஉங் கொள்க. இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.