Couplet – 0292

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் Chapter
0292அறம் துறவறம்வாய்மை Truthfulness
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்  

பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

பரிமேலழகர் உரை 

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்= பிறர்க்கு
குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த= பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின்பாலவாம்.

உரைவிளக்கம்

'குற்றம் தீர்ந்த நன்மை' அறம்; அதனைப்பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயி்ர் அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயிற் பொய்ம்மையாம்; பயப்பின் மெய்ம்மையாம் என்பது கருத்து.
இவை இரண்டு பாட்டானும் தீங்குபயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மைபயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழாததுகூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்ததுகூறலும் பொய்ம்மை எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.