குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0292 | அறம் | துறவறம் | வாய்மை Truthfulness |
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் பரிமேலழகர் உரை புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்= பிறர்க்கு குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த= பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின்பாலவாம். உரைவிளக்கம் 'குற்றம் தீர்ந்த நன்மை' அறம்; அதனைப்பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயி்ர் அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயிற் பொய்ம்மையாம்; பயப்பின் மெய்ம்மையாம் என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் தீங்குபயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மைபயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழாததுகூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்ததுகூறலும் பொய்ம்மை எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.