Couplet – 0281

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம்
Chapter
0281அறம்துறவறம்Refrain from Theft/Fraud
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு  

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்று்ம்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

பரிமேலழகர் உரை

எள்ளாமை வேண்டுவான் என்பான்= வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்;
எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க= யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.

உரை விளக்கம்

எள்ளாது என்னும் எதிர்மறைவினையெச்சம் 'எள்ளாமை' எனத் திரிந்து நின்றது. 'வீட்டினை யிகழ்த'லாவது, காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி யெனப் பூதம் நான்கேயென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்புப்போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்கநூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்நநூற் பொருளையேனும் ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின், அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்தொன்றும்' என்றார். நெஞ்சு கள்ளாமற்காக்க எனவே, துறந்தார்க்கு விலககப்பட்ட கள்ளுதல், கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.