பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலில் பெரிது. (03)
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu.
பரிமேலழகர் உரை:.
(இதன்பொருள்):
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்= இவர்க்கு இதுசெய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்;
நன்மை கடலி்ற் பெரிது= அதன் நன்மை கடலினும் பெரிதாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இவை மூன்றுபாட்டானும் முறையே காரணமின்றிச் செய்ததூஉம், காலத்தினாற் செய்ததூஉம், பயன்தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger
than the sea.