குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0211 | அறம் | இல்லறம் | ஒப்புரவு அறிதல் Social Responsibilities |
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி மாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு. பரிமேலழகர் உரை (இதன்பொருள்) மாரிமாட்டு உலகு என் ஆற்றும்= தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யாநின்றன? கடப்பாடு கைம்மாறு வேண்டா= ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவனவல்ல. பரிமேலழகர் உரைவிளக்கம் என்னாற்றும் என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிருந் தன்மைய அல்ல என்பது கடப்பாடு என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.