குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0397 | பொருள் | அரசியல் | கல்வி Education |
யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
யாதானும் நாடு ஆமால் ஊர்ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாத ஆறு.
பரிமேலழகர் உரை
யாதானும் நாடாம் ஊராம்= கற்றவனுக்குத் தன்நாடும் தன் ஊருமேஅன்றி, யாதானும் ஒருநாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊராம்; ஒருவன் சாம்துணையும் கல்லாதவாறு என்= இங்ஙனமாயின் ஒருவன் தான் இறக்கும் அளவும், கல்லாது கழிகின்றது என்கருதி?
விளக்கம்
உயிரோடு சேறலின் 'சாந்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தமபோல உற்றுப் பொருட்கொடையும், பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்விபோலச் சிறந்தது பிறிதுஇல்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.