குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0203 | அறம் | இல்லறம் | தீவினை அச்சம் Fear of Evil Deeds |
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல் அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் பரிமேலழகர் உரை (இதன்பொருள்) அறிவினுள் எல்லாம் தலை என்ப= தமக்கு உறுதி நாடும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவர் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்= தம்மைச் செறுவார்மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. பரிமேலழகர் உரைவிளக்கம் விடுதற்குக் காரணமாகிய அறிவை 'விடல்' என்றும், செயத்தக்குழியும் செய்யாது ஒழியவே, தமக்குத் துன்பம் வாராது என உய்த்து உணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாந் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும், தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.