குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம்-Chapter The Utterance of Pleasant Words |
0094 | அறம் | இல்லறம் | இனியவை கூறல் |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum Inpurooum Inso Lavarkku. பரிமேலழகர் உரை:. யார் மாட்டும் இன்பு உறூஉம் இன்சொலவர்க்கு= எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்= துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். பரிமேலழகர் உரைவிளக்கம் நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை யுடைமையின், 'துவ்வாமை' யென்றார். 'யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொலவர்க்கு'ப் பகையும் நொதுமலுமின்றி உள்ளது நண்பேயாம்; ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து. Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.