குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter Praise of God |
0001 | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு अगर मुदल एऴुत्तेल्लाम् आदि भगवऩ् मुदट्रे उलगु Agara Mudhala Ezhuth-thellaam Aadhi Bagavan Mudhatre Ulagu பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.) Just as A is the first and basic of all alphabets of any language, the first and foremost factor of this world is the supreme God. The existence of an object implies a creator. The invisible and unknown factor has to be inferred and realized only from the existing and known factors. Hence the alphabets suggest the existence of God. Sanskrit Translation by Shri S.N. Srirama Desikan अकारादेव निर्यान्ति समस्तान्यक्षराणि च । चराचर प्रपञ्चोऽय मीश्वरादेव जायते ॥ அகாராதே₃வ நிர்யாந்தி ஸமஸ்தான்ய க்ஷராணி ச | சராசர ப்ரபஞ்சோ (அ)ய மீஸ்₂வரா தே₃வ ஜாயதே ||