குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0208 | அறம் | இல்லறம் | தீவினை அச்சம் Fear of Evil Deeds |
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடியுறைந் தற்று தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று பரிமேலழகர் உரை (இதன்பொருள்) தீயவை செய்தார் கெடுதல்= பிறர்க்குத் தீவினைகளைச் செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்; நிழல் தன்னை வீயாது அடிஉறைந்தற்று= ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்தன்னை விடாது வந்து அடியின்கண் தங்கிய தன்மைத்து. பரிமேலழகர் உரைவிளக்கம் இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றிநின்று, அதுவந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின்அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரையன்று என்பதற்கு அடிஉறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, 'வீயாது அடியுறைந்தற்று' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார், ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.