கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி (05)
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani.
பரிமேலழகர் உரை:.
கேடும் பெருக்கமும் இல் அல்ல= தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கு முன்னே அமைந்து கிடந்தன;
நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி= அவ்வாற்றை அறிந்து அவை காரணமாக மனததின்கட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடுவாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கண்நிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதலன்று என உண்மையுணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை யழகு செய்தலின், சான்றோர்க்கணி யென்றார்.
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind(under both).