குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0255 | அறம் | துறவறம் | புலான் மறுத்தல் Avoid Non-Vegetarian Food |
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு உண்ணாமை உள்ளது உயிர் நிலை ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு பரிமேலழகர் உரை உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது= ஒருசார் உயிர் உடம்பின்கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின்கண்ணது; உண்ண= ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின்; அளறு அண்ணாத்தல் செய்யாது= அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. பரிமேலழகர் உரைவிளக்கம் உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்றார். உண்ணின் என்பது, உண்ண எனத்திரிந்து நின்றது.ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப்பாவம் கொன்றார்மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவமில்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.