குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0349 | அறம் | துறவறம் | துறவு Renunciation |
பற்றுஅற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்= ஒருவன் இருவகைப்பற்றும் அற்றபொழுதே, அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்= அவை அறாத பொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.
உரைவிளக்கம்
காரணமற்ற பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார்; "அற்றது பற்றெனில்- உற்றது வீடு[2]" என்பதூஉம் அதுபற்றி வந்தது.
இவையிரண்டுபாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.