Couplet-0021

குறள் எண்
Couplet No
பால்இயல்அதிகாரம் – Chapter
The Greatness of Ascetics  
0021அறம்பாயிரம்நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu
Ventum Panuval Thunivu.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) ஒழுக்கத்து நீத்தார் பெருமை = (தமக்குரிய) ஒழுக்கத்தின் கண்ணே (நின்று) துறந்தாரது பெருமையை;
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு = விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் (இதுவே விழுமிது என) விளம்பும், நூல்களது துணிவு.

பரிமேலழகர் உரை விளக்கம்:

தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நீன்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக, அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவந் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித்துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக, மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்றாகிய 'எனது' என்பதும், அகப்பற்றாகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.
‘பனுவல்’ எனப் பொதுப்படக் கூறியவதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமயநூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவென்பது பெற்றாம்.
செய்தாரது துணிவு 'பனுவன்'மேல் ஏற்றப்பட்டது.

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who,
while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

Leave a comment