குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0383 | பொருள் | அரசியல் | இறைமாட்சி Qualities of King |
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவற்கு
தூங்காமை கல்வி துணிவு உடைமை இம் மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு.
பரிமேலழகர் உரை
நிலன் ஆள்பவற்கு- நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு;
தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா- அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வி உடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா என்றவாறு.
பரிமேலழகர் விளக்கம்:
கல்வியது கூறுபாடு பின்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதிற் செய்வது ஆதலின் அஃது ஈண்டு உபசார வழக்கால் துணிவு எனப்பட்டது.உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. இவற்றுள் கல்வி ஆறங்கத்திற்கும் உரித்து; ஏனைய வினைக்கு உரிய; 'நீங்கா' என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.