'பெருஞ்செல்வம்' எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சவும்மையான், வருதல் என்பது பெற்றாம். அக்குழாங் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பல்திறத்தால் தானே (பஃறிறத்தாற்றானே) வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறு போல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.